Blog

உள்ளத்தை எழுதிய உத்தமன் – நடிகர் இயக்குனர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன்

இராதாகிருஷ்ணன் பார்த்திபன்

1-பாலகுமாரன் = நண்பர்

2-நண்பர் = பாலகுமாரன்

இரண்டாவதையே முதலாவதாய் மதிக்கிறேன் நான்! அந்தத் தோழமையை அவரின் அருகாமையில் மட்டுமல்ல, வெறும் நினைவலையில் கூட உணர்கிறேன்.

உள்ளதை எழுதுபவர்களில்

உள்ளத்தை எழுதும் Powerfulபுத்தியும் அதன் தன் மை’யை சுவாரஸ்யப்படுத்தி பலரையும் வசியப்படுத்தும் யுக்தியும் படைத்தவர்.

போகிற walk-கில் என் அப்பாவை பற்றி நான் பேசியவற்றை தன் அழகிய நடையில் அவர் புத்தகமாய் பதிந்ததை பத்திரமாய் பாதுகாப்பேன் காலத்திற்கும்!

70-வதில் எழுவதே. நிற்பதே, நடப்பதே ஊன்றுகோல் துணையுடனே பலருக்கு பாலருக்கும் குமரன்களுக்கும் உள்ள உள்ளத்தெம்போடு இந்த 70-பதிலும் திரு பாலகுமாரனின் எழுதுகோல் நின்று விளையாடி நம் கவனத்தை வென்று விடுகிறது. எழுத்தின் உசத்தியான நிலையிலிருந்து என்றும் விழா சிந்தனாவாதியைப் பற்றி இவ்விழா மலரில் எழுதும் ஆனந்தத்திற்கு பேரே பேரானந்தம்!

வாழ்த்துக்கள் சூப்பா பாலகுமாரனுக்கும். அவர் தன் நண் படைக்கும்.

வெறும் வாழ்த்தெதற்கு?

பெருமை’ வாய்ந்த எழுத்துச்சித்தருக்கு!

அவர் எழுத்தால் மனநல லயம் அடைந்தவர்களின் இதயத்துடிப்பே அவரின் நீண்ட ஆரோக்கிய ஆயுளுக்கு சந்தா கட்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *